பெண்ணிடம் ஆபாசமாக பேசிய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் தலைமை காவலர் சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்மணி ஒருவர், தனது கணவர் அடிக்கடி தன்னை அடித்து துன்புறுத்துவதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக்காவலர், சண்முகம் புகாரை பெறாமல் இழுத்தடித்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

இதனையடுத்து தலைமை காவலரின் அத்துமீறல் குறித்து புதுச்சேரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்தார். எஸ்.பி உத்தரவையடுத்து தலைமை காவலர் சண்முகத்தை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

இந்த நிலையில் துறை ரீதியான விசாரணைக்குட்படுத்தப்பட்ட சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.