இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...
இந்தியாவில் 6 நாட்களுக்குப்பின் 30 ஆயிரமாகக் குறைந்திருந்த கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 562 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 42 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 17 லட்சத்து 69ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது.
 
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 5,395 பேர் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.29 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 562 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 25 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 47 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 47 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 307 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 48.52 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.