முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி ஊழியருக்கு அடி, உதை....

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி ஊழியரை நபர்கள் சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி ஊழியருக்கு அடி, உதை....

மும்பையின் மதுங்கா பகுதியில் பெண் ஒருவர் முககவசம் அணியாமல் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு அபராதம் விதித்தனர்.

இதைகண்ட அங்கிருந்த நபர்கள் சிலர், மாநகராட்சி ஊழியரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் மாநகராட்சி ஊழியரை தாக்கியது தொடர்பாக, 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.