புதுச்சேரியில் ஆக.31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு...

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆக.31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு...

 கொரோனா தொற்றின் 3ஆம் அலைக்கு நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 மணி நேரம் நீட்டித்து 10 மணி வரை செயல்படாம் என கூறப்பட்டுள்ளது.