இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா- 295 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,478,419 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா- 295 பேர் பலி

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது என்றும் அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,938 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்றும் இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 295 பேர் கொரோனா வுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்துள்ளது.