தாலிபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அதிபராகிறார்...

ஆப்கானில் தாலிபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அந்த நாட்டின் அதிபராக தேர்வுசெய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தாலிபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அதிபராகிறார்...

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள்  வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள்  வசம் சென்றது. இதனிடையே தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிய  மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல்  தாலிபான்கள்  ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தாலிபான்  தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர்.

இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தாலிபான்  தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ் தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர அவர்கள்  முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாலிபான்களின் உயர்  தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா  புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார் என்று  தாலிபான்களின்  கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் தாங்கள்  அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில்  சந்தேகம் இல்லை என்றும் அனாமுல்லா தெரிவித்துள்ளார். 
இதனிடையே தாலிபான்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி, ஆப்கானிஸ்தானில்  புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அறிவிப்பை  வெளியிடுவார்கள் என ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.