நீதி, உண்மைக்கு நிகரான ஸ்ரீராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி: ராகுல்காந்தி டிவிட்

ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீதி, உண்மைக்கு நிகரான ஸ்ரீராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி: ராகுல்காந்தி டிவிட்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறக்கட்டளை பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, கடவுள் ஸ்ரீ ராமர் என்பவர் நீதி, உண்மைக்கு நிகரானவர் என்றும் அவரது பெயரில் ஏமாற்றுவது அநீதி என்றும் பதிவிட்டுள்ளார்.