தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும்....ராகுல் காந்தி

தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும்....ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசு பற்றியும், மத்திய அரசின் கொள்கைகள் பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து அவர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி  தற்போது தனது  டுவிட்டர் பக்கத்தில்,  இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மத்திய அரசு மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.