கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடம் பதுங்கி இருந்த வழிபறி கொள்ளையர்கள்... மடக்கி பிடித்த போலீஸ்

புதுச்சேரியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிபறியில் ஈடுப்பட முயன்ற கொள்ளையர்களை  போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடம் பதுங்கி இருந்த வழிபறி கொள்ளையர்கள்... மடக்கி பிடித்த போலீஸ்

புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கணவருடன் சென்ற ஆசிரியையிடம் மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.  இது சம்பந்தமாக வில்லியனூர் போலிசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், அப்பகுதியில் இரவு ரோந்து பணியையும் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியில் வில்லியனூர் போலீசார் ரோந்து சென்ற போது, ஊசுட்டேரி படகு குழாம் அருகே சில மர்ம நபர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.  பதுங்கி இருந்த மர்மநபர்களை மடக்கி பிடித்த போலீசார், அனைவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் ஒருவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளஞ்செழியன், மற்ற நால்வர் புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன், முரளி, பிஃலோமிந்தல், சுபாஷ் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஐந்து பேரும் அவ்வழியே வரும் பொதுமக்களிடம் வழிபறி செய்வதற்கு பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை கைது செய்து அவர்களிடமிருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.