திருமண ஆல்பம் சேதமடைந்ததால் மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்!!

திருமண ஆல்பம் மழை வெள்ளத்தில் சேதமானது தொடர்ந்து அப்பெண் மீண்டும் ஒருமுறை ஆல்பத்திற்காக திருமணம் செய்ய வேண்டும் என கேட்டு வந்தது தற்போது வைரலாகி வருகிறது

திருமண ஆல்பம் சேதமடைந்ததால் மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்!!

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழும் விஷயம் எனவும் திருமணத்தில் நடக்கும் அனைத்து சுபகாரியங்களும் பிடித்தவகையாக அமையும், அந்த மகிழ்ச்சியான தருணத்தை மீண்டும் ஒரு முறை திருமணம் செய்வதாக் கூட தர இயலாது என்பது அனைவராலும் ஏற்கக்கூடிய கருத்தாக இருந்து வருகிறது.

திருமண நாளை யாரலும் மறக்க முடியாது எனவும் அதனை அந்நாளன்று எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைபடங்கள் மூலமாகவே பார்த்து ரசித்துக்கொள்ள முடியும்.இப்படிப்பட்ட புகைபடங்கள் அவர்களது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும், மேலும் அதனை வருங்கால சந்ததியினருக்கு எடுத்து வைக்கப்பட்டுள்ள புகைபடன்ங்கள் மற்றும் வீடியோ மூலம் மட்டுமே காண்பித்து அவர்களை மகிழ்விக்கவும் முடியும்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இல்லதரசி ஒருவர் அவரின் திருமணத்தை பற்றி பேசுகிறார். அவர் அப்போது தனது திருமணம் ஆல்பம் மழை வெள்ளத்தில் சேதமாகியதாகவும் அதனால் தனக்கு இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டு அவ்வனைத்தையும் மீண்டும் சேகரிக்க வேண்டும் என் பேசியுள்ளதாக இருக்கிறது.இந்த சம்பவம் மலேசியாவில் நடைபெற்ற வெள்ளத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.