தடுப்பூசி போடறீங்களா... இந்தியா போறீங்களா..? பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு...

தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்தியா செல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போடறீங்களா... இந்தியா போறீங்களா..? பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு...
தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்தியா செல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பாத பிலிப்பைன்ஸ் மக்கள் இந்தியாவுக்கு செல்லும்படி அந்நாட்டு அதிபர் கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ராட்ரிகோ டூடெரெட் , அண்மையில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். 
 
அப்போது கொரோனாவுக்கு எதிராக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்திய அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் கைது செய்யப்படுவர் என எச்சரித்தார்.
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பாதோர், பிலிப்பைன்ஸில் இருக்க கூடாது என்றும், தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் அமெரிக்கா அல்லது இந்தியாவிற்கு சென்றுவிடும்படி அவர் கூறினார்.
 
அதிபரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.