விமானத்தில் பயணி ஒருவர் செய்யும் வினோத செயல்!

விமானத்தில் மாஸ்க் அணியாமல் வந்த பயணி ஒருவரின் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் பயணி ஒருவர் செய்யும் வினோத செயல்!

அமெரிக்காவில் இன்றளவும் கொரோனா பரவல் அடங்காத சூழலில் அங்கு பல கட்டுபாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.பொது இடங்களில் மாஸ்க் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல கட்டுபாடுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.இதனிடையில் விமானத்தில் உள்ளே பயணிக்கும் விமான ஊழியருக்கும் மாஸ்க் காரணமாக நடந்த விவாதம் விமானத்தையே கலி செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. 

நேற்று முந்தினம் ஆடம் ஜென் என்ற பயணி ஒருவர் அமெரிக்காவின் ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஏறியுள்ளார்.அவர் விமானத்தில் ஏறிய பின்பு முகமுடியை கழட்டியதாக சொல்லப்படுகிறது.

கொரோனா பரவலின் காரணமாக அந்த விமான பயணியை பணிப்பெண் ஒருவர் மாஸ்க் அணியுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஆடம் தொடர்ந்து முகமுடியை அணிய மறுப்பு தெரிவித்துள்ளார்.விமான பணிப்பெண் ஆடமிடம் மாஸ்க் அணியாவிட்டால் நீங்கள் விமானத்தை விட்டு கீழே இறக்கப்படுவீர்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடுப்பான விமான பயணியான ஆடம் உள்ளாடையை வைத்து முகத்தை மூடியது மட்டுமில்லாமல் அரசு அறிவித்த நெறிமுறைகளில் உள்ளாடையை மாஸ்க்காக அணியலாம் என கூறப்பட்டுள்ளது நான் எவ்வித விதிகளையும் மீற வில்லை என தெரிவித்தார்.

விமானத்தில் சாப்பிடுவதற்கும்,நீர் அருந்துவதற்கும் இடையில் மாஸ்க் அணிவதில்லை அதற்கான காரணத்தை கூறுமாறு விமான பணியாளர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.விமான பணியாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பயணியை விமானத்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் கடுப்பான சக பயணிகளும் ஆடமிற்கு ஆதரவாக செயல்பட்டு விமானத்தில் இருந்து இறங்கியுள்ளனர்.இச்செயல் அமெரிக்கா முழுவதும் பரபரப்பை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ஆடம் விமானத்தில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது..