பளிங்கு பாறையிலிருந்து தவறி விழுந்த மாமியார்... காப்பாற்ற குதித்த மருமகளும் பலி

மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பளிங்கு பாறைகளில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​சமநிலை இழந்து நர்மதா நதியில் விழுந்தனர்.

பளிங்கு பாறையிலிருந்து தவறி விழுந்த மாமியார்... காப்பாற்ற குதித்த மருமகளும் பலி

மும்பையில் வசிக்கும் ஹன்சா சோனி (50). அவர் மருமகள் ரித்தி பிச்சாடியா (22) ஆகியோர் பெராகாட்டை சுற்றி பார்க்க சென்றனர்.

அப்போது இருவரும் பாறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஹன்சா, நர்மதா ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக ரித்தி நீரில் குதித்தார். ஆனால் பலத்த நீரோட்டத்தில் இருவரும் நர்மதா ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடுதலில், ஹன்சா சோனியின் சடலமும், ரித்தியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பட்டு சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் செல்ஃபி எடுக்க தடை விதித்து எச்சரிக்கை பலகையை வைத்தும் பொதுமக்கள் ஆபத்து உணராமல் இது போன்ற சம்பங்களில் ஈடுபடுவது