ஜூலை 21ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ?

நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 21ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ?

கொரோனா 2வது பேரலைக்கு இடையே  2021ம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கூடியது. முன்னதாக ஜனவரி 29ம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் அவை துவங்கியபோது,  எதிர்க்கட்சிகள் கிளப்பிய அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டு, பின் மார்ச் 8-ம் தேதி 2ம் பகுதிக்கான கூட்டம் தொடங்கியது.

அப்போது டெல்லி ஆளுநருக்கான அதிகாரம், காப்பீட்டு துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்பட்டு,  மார்ச் 25-ம் தேதியே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தநிலையில் நடப்பாண்டின் மழைக்கால கூட்டம் ஜூலை 21ம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் ஜூலை முதல் வாரத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். நாளை கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மழைக்கால கூட்டத்தொடருக்கான அதிகாரப்பூர்வாக தகவல் வௌியாகும் என கூறப்படுகிறது.